×

பாளை பெருமாள்புரத்தில் பரபரப்பு வீடுகளில் புகுந்து இளம்பெண்களை செல்போனில் படம்பிடித்த இன்ஜினியர்-பொதுமக்கள் கவனித்து போலீசில் ஒப்படைத்தனர்

கேடிசி நகர் : பாளை பெருமாள்புரத்தில் வீடுகளில் புகுந்து இளம்பெண்களை செல்போனில் படம்பிடித்த இன்ஜினியரை, பொதுமக்கள் கவனித்து போலீசில் ஒப்படைத்தனர்.
 பாளை பெருமாள்புரம் என்ஹெச் காலனி பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பூங்கா உள்ளது. இந்த பூங்காவில் கடந்த சில தினங்களாக 35 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் நடைபயிற்சி சென்றார்.

இவர், அந்த பகுதியைச் சேர்ந்தவர் இல்லை என்பதால் அங்கு வழக்கமாக வாக்கிங் செல்பவர்கள் இவரை கண்காணித்தனர். மேலும் அந்நபர், அங்குள்ள வீடுகளில் ஆண்கள் வேலைக்கு சென்றதும், வீட்டில் தனியாக இருக்கும் இளம்பெண்களை நோட்டமிட்டு வந்துள்ளார். நண்பகல் நேரத்தில் வீடுகளின் காம்பவுன்ட் சுவர் ஏறிக்குதித்து வீட்டில் இருக்கும் இளம்பெண்களை அவர்களுக்கே தெரியாமல் செல்போனில் வீடியோவில் பதிவுசெய்தார்.

 இதே போல் நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் அங்குள்ள ஒரு வீட்டின் காம்பவுன்ட் சுவர் ஏறிக்குதித்த இவரை வீட்டில் உள்ளவர்களும், அப்பகுதி மக்களும் சுற்றி வளைத்துபிடித்து நன்றாக கவனித்து பெருமாள்புரம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் அங்கு வந்த போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து அவரை காவல்நிலையத்திற்கு அழைத்துச்சென்று போலீசார் விசாரணை நடத்தினர்.

 இதில் அவர், பாளை ராஜேந்திரன் நகரை சேர்ந்த இமானுவேல்தாசன் மகன் பால் ராபின்சன் (36) என்பது தெரிய வந்தது. மேலும் பொறியியல் பட்டப் படிப்பு முடித்து சென்னையில் உள்ள கம்பெனியில் வேலை பார்த்துவந்த இவர், கொரோனா ஊரடங்கின்போது நெல்லை திரும்பினார். இவரது மனைவி மானூரில் உள்ள பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருவதாக தெரிகிறது. தம்பதிக்கு ஒரு மகன் உள்ளார். புகாரின் பேரில் வழக்குப் பதிந்து அவரை கைது செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Palai Perumalpuram , KDC Nagar: An engineer who broke into houses in Palai Perumalpuram and filmed teenagers on his cell phone has been taken into custody by the public.
× RELATED பாளை பெருமாள்புரத்தில் பரபரப்பு...